அனைத்து ஆசிரியர்களுக்கும் டேப்லெட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும், ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கவும், ஆசிரியர் நலனை காக்கவும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றி கொள்ள, அனைத்து இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும்.. மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும், அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்..
அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.. உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தப்படும்.. . மொத்தம் ரூ.225 கோடி ரூபாய் மதிப்பில் ஆசியர்களுக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்….” என்று தெரிவித்துள்ளார்..