ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்….! அரசு கடும் எச்சரிக்கை…..!

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், எந்த மாநிலத்திலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக, தங்களுடைய சொந்த மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வசிப்பவர்களும் தங்களுடைய பகுதியிலேயே தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ள இயலும்.


ஆனாலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் பொருட்கள் தமிழகத்தில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்திருந்தது.

ஆகவே அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில் எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த உத்தரவில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்றும், அதனை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தை சுட்டெரிக்க போகும் வெயில்…..! வானிலை அலார்ட் கொடுத்த வெதர்மேன்……!

Fri Apr 14 , 2023
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் தற்போது 100 டிகிரி பாரான்ஹீட்டை கடந்துள்ளது. வெயிலின் தாக்கம் திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரான்ஹீட் வரையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் இந்த வெயில் தாக்கம் காரணமாக, அணைதினமும் பணிக்கு செல்வோர், கட்டுமான தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பை சந்திக்க நேர்கிறது. நன்பகல் சமயத்தில் வெப்பநிலை […]
images 2023 04 14T070813.528

You May Like