‘டேட்டிங் ஆப்’ மூலம் பழகி சந்திக்க சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி! கட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்த சைக்கோ இளைஞர்!

டேட்டிங் ஆப்பின் மூலம் சந்தித்த பெண்ணை அடித்து சித்திரவதை செய்து தன் வீட்டின் அடித்தளத்தில் அடைத்து வைத்திருந்த அமெரிக்க இளைஞரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. அமெரிக்காவின் ரிவர் டயல் நகரைச் சார்ந்த பெண் ஒருவர் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் அப்பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி இருக்கிறார். இந்நிலையில் இருவரும் சந்திக்க முடிவு செய்து இருக்கின்றனர். அப்போது அந்த இளைஞரை சந்திப்பதற்காக அவரது தாய் வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை அந்த இளைஞர் அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து இருக்கிறார். மேலும் அவரை தன் வீட்டின் அடித்தளத்தில் கட்டி வைத்தும் கொடுமைப்படுத்தியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இது தொடர்ந்து அந்த பெண்ணை வெளியில் அனுப்பி கடைகளில் பொருள்கள் சில வாங்கி வர சொல்லியிருக்கிறான். அந்த பெண் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் உதவி கோரியிருக்கிறார். அவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை இவர் டயல் காவல்துறையினர் கண்டுபிடித்து அவரது பிடியில் இருந்து அந்த பெண்ணை மீட்டனர். மேலும் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை இது தொடர்பாக அந்த இளைஞரின் தாய்க்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்து இருக்கிறது.

1newsnationuser5

Next Post

7.3 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை!... 42 வயதில் பெற்றெடுத்த அதிசயம்!... மருத்துவர்கள் விளக்கம்!

Wed Feb 22 , 2023
பிரேசில் நாட்டில் 42 வயதுடைய பெண் ஒருவர் 7.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தையின் சராசரி எடை 3.3கிலோ, பெண் குழந்தையின் சராசரி எடை 3.2 கிலோ ஆக இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டின் பார்ண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் 42 வயதுடைய க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். […]
brazil 7.3 kg child

You May Like