பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை. இதனால் உள்கட்சி மோதல் வெடித்தது. நேற்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். இதில் சிலவற்றை உளறிக்கொட்டினார்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து காயத்ரி ரகுராமுக்கு உத்தரவிட்டார். இதுபற்றி காயத்ரி ரகுராம் கூறுகையில், ’’அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தே என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார்.’’ என குற்றம்சாட்டி உள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசியில் தொடங்கிய தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்ப்பிரிவு தலைவருக்கு அழைப்பில்லாமல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காயத்ரி ரகுராம் கடும் கோபத்தில் இருந்தார். சில காலமாகவே தான் 8 ஆண்டுகளாக கட்சியில் இருப்பதாகவும் தனக்கு உயர்பதவிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி நினைவு படுத்தி வருகின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காசியில் தமிழ சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்ப து குறிப்பிடத்தக்கது.