அன்வர் ராஜா, மைத்ரேயன் வெறும் டீசர் தான்.. அதிமுக மாஜி அமைச்சர்களை குறி வைக்கும் திமுக..!! ஸ்டாலின் பலே கணக்கு..

SENGOTTAIAN AND SELLUR RAJU 1743243516525 1743243521019

ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து மூன்று புள்ளிகளை தூக்கி சம்பவம் செய்திருக்கிறது திமுக. அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் முன்னாள் எம்பி மைத்திரேயன் உள்ளிட்டோர் திமுக கட்சியில் இணைந்தனர்.


தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் அதிமுக பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைவர்களை திமுக குறிவைத்து வருகிறது.

அதிமுக தலைமை மீது செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, ஆர். காமராஜ், மணிகண்டன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களை திமுகவுக்கு கொண்டு வர நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக அமைச்சர்கள் திமுகவில் இணைந்தால், அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மாறும் நிகழ்வுகள் தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுவான விஷயமாகும். இதன் காரணமாக கட்சிகளின் பலம் மாறுபடும்.

அதிமுகவைச் சேர்ந்த அந்த முக்கிய பிரமுகர், திமுகவில் இணைவதற்கான காரணம் குறித்து பல யூகங்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் கொள்கைகள் மீதான அதிருப்தி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்ப்பு, பதவி கிடைக்காத விரக்தி போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சிலர், அவர் மீதுள்ள வழக்குகள் காரணமாக கட்சி மாறுகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: தூள்…! சொத்து வாங்க அல்லது விற்க இனி நேரில் போக வேண்டாம்…! தமிழக அரசின் அதிரடி மாற்றம்…!

English Summary

Anwar Raja, Maitreyan are just teasers.. DMK is knocking out AIADMK ex-members..!!

Next Post

சிந்து நதிநீரை நிறுத்தினால்; இந்தியா மீது 10 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்துவோம்!. பாகிஸ்தானின் நஜாம் சேதி எச்சரிக்கை!.

Mon Aug 18 , 2025
இந்தியாவுக்கு அணு மிரட்டல் விடுவது அண்டை நாடான பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் “பிடித்த பொழுதுபோக்கு” போல் தெரிகிறது. சமீபத்திய அணு மிரட்டலை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அரசியல் விமர்சகர் நஜம் சேதி வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, “என் நாட்டின் இருப்பே ஆபத்தில் இருந்தால், எந்த வகையான ஆயுதத்தையும் தவிர்க்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீஃபின் நெருங்கியவராகக் கருதப்படும் சேதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி […]
Nuclear attack on India 11zon

You May Like