#சென்னை : 22 பவுன் தங்க நகைகளை மீட்டு கொடுத்த ஆர்.பி.எஃப் காவலர் மற்றும் ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்..!

காரைக்குடி இரயில்வே சந்திப்பிலிருந்து புறப்பட்ட பல்லவன் விரைவு இர‌யி‌ல் , நேற்று நண்பகல் நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இரயில் நிலையத்தை வந்தடைந்தது.


பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு, வழக்கம் போல் ஆர்.பி.எஃப் காவலர் நிரஜ்குமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில் ரயிலின் ஒரு டிராலி பை இருந்தது.

அதனை திறந்து பார்த்தபோது, 22 பவுன் தங்க நகைகள் மற்றும் இதன் ரூ.8.24 லட்சம் இருந்துள்ளது. இது பற்றி எழும்பூர் நடைமேடை அதிகாரியிடம் தகவல் தெரிவித்த பின்னர் பணத்தையும், நகைகளையும் ஒப்படைத்துள்ளார். இத‌னிடையே மதுரை பகுதியை சேர்ந்த ஜெரினா என்ற பெண், தன்னுடைய டிராலி பையை பல்லவன் விரைவு ரயிலில் தவறவிட்டேன் என ரயில் மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து , மேலாளர் விசாரித்த பின்னர், ஜெரினாவின் பைதான் என்று தெரிய வந்தது. மேலும், ஜெரினா மற்றும் கணவர் ஜாஃபர் உரிய ஆவணம் சமர்பித்து, அவர்களுக்கு சொந்தமான 22 பவுன் நகைகளுடன் பணத்தினையும் பெற்றுக் கொண்டனர். 

பையை எடுத்து வந்து உரியவரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்து ரயில்வே ஊழியர்களை மற்றும் ஆர்.பி.எஃப். காவலர் நீரஜ்குமார் பஸ்வான் ஆகியோரை சென்னை ரயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் ஆர்.பி.எஃப் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#விழுப்புரம் : விஷம் அருந்தி விட்டு காவல் நிலையம் சென்ற பெண் கூறிய அதிர்ச்சி காரணம்.!

Thu Nov 17 , 2022
விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார்.  சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார்.  இந்த நிலையில், […]
Poison

You May Like