தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த வட மாநில தொழிலாளியின் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேபாளத்தை சேர்ந்தவர் கோபி சிங்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கின்ற உடையார் குளத்தை சேர்ந்த பிரவீன் என்பவரின் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தகைய நிலையில்தான் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் நீராடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத மகள் ஆயிஷா தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றன.