ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் 180வது விதியின்படி, ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை, ஆண்டு தோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி மற்றும்சர்வதேச மனித உரிமைகள் தினமானடிசம்பர் 10-ம் நாள் தேதி நான்குதினங்களில் நடத்திட வேண்டும்.
இதன் மூலம், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி, கிராம சபை கூட்டங்கள், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்பட்டு வருவதை போன்று, நகர்ப்புற உள்ளாட்சி
அமைப்புகளில், ஏரியா சபை கூட்டங்கள், வருடத்திற்கு நான்கு முறை என நிர்ணயிக்கப்பட்ட நாட்களில்
நடத்தப்படவும், இந்தக் கூட்டங்களில்
பொது மக்கள் பெருமளவில்
கலந்துகொண்டு தங்கள் பகுதியின்
அடிப்படை வசதி தேவைகள் குறித்து
தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், தங்கள் பகுதியின்
வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கவும்,
மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி
அமைப்புகளின் நிர்வாகத்தில் மக்கள்
பங்கேற்பினை உறுதி செய்யவும்,
அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்பெறச்
செய்யவும் ஏதுவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.