சட்டமன்ற தேர்தல் 2026: வரும் 15 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம்..! – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

admk off

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 15 ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 – திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை,

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read more: வங்கியில் இருந்து பணம் எடுக்குறீங்களா? வரம்பை மீறினால் 84% அபராதம்.. புதிய விதிகள் இவை தான்!

English Summary

Assembly elections: AIADMK’s option petition will be accepted from the 15th..! – Edappadi Palaniswami

Next Post

Raw Egg : பச்சை முட்டை சாப்பிடுறீங்களா..? அதில் இருக்கும் பக்க விளைவுகளை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

Thu Dec 11 , 2025
Raw Egg: Do you eat raw eggs? Be sure to know the side effects of eating them!
raw egg

You May Like