பயங்கரம்…! டாக்காவில் வெடி விபத்து… 17 பேர் பலி… 100-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!

பங்களாதேஷ்: டாக்காவில் உள்ள ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4:45 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.


சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டன,” என்று போலீசார் தெரிவித்தனர். குறைந்தபட்சம் 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்று போலீசார் கூறினார்.

காயமடைந்தவர்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக டிஎம்சிஎச் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Vignesh

Next Post

எடப்பாடியின் உருவ படத்தை எரித்த பாஜகவினர்...! போலீசார் அதிரடி கைது...!

Wed Mar 8 , 2023
பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக-வின் ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் […]
20230308 055600

You May Like