தற்காலத்தில் அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் அழிந்து வரும் நிலையில், வீடுகளில் பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோர் காலத்தில் நாம் எங்கு பார்த்தாலும் பசுமையான பகுதிகளுடன் பறவைகளின் ஒலிகளும் கேட்டு கொண்டே இருக்கும். ஆனால், தற்போது பறவைகளின் அழிவின் விளிம்பில் நிற்கும் பட்டியலில், 4ஆவது இடத்தில் பச்சைக் கிளிகள் உள்ளன.
இதனை தொடர்ந்து இன்று முதல் பச்சை கிளிகளை கூண்டில் அடைத்து வீட்டில் வளர்ப்பதும், அதனை விற்பதும் சட்டப்படி குற்றமாகும் என வனத்துறை கூறியுள்ளது.
சமீப கால கட்டத்தில் கிளிகளை ஆன்லைனில் அளவிற்கு விற்பதும் வாங்குவதும் அதிகமாக இருந்து வருகிறது. மேலும், இதனையடுத்து கிளி வளர்ப்பவர்கள் பிடிபடும் நிலையில், அவர்களுக்கு 6 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.