Attack: கோவையில் பரபரப்பு..! அதிமுக கூட்டணி கட்சியினர் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்…!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், பாஜகவினர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் காயமடைந்தனர். எதிர்விளைவுகளை எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், 32 வது வார்டு பகுதியில், பாஜக சகோதர சகோதரிகள் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அஇஅதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு என்ற சகோதரர் மற்றும் சில சகோதரிகள் காயமடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணி, தோல்வி பயத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நவ்ஷாத் போன்ற நபர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள். இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

பாஜக ஜனநாயக வழியில் பயணிக்கும் கட்சி. எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்று, வாக்கு சேகரிக்கச் செல்லும் பாஜக சகோதர சகோதரிகளைத் தடுப்பதும், தாக்குவதுமான கீழ்த்தரமான நிகழ்வுகள் நடைபெறுமேயானால், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளவும், சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒரு எச்சரிக்கையாகக் கூறிக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தாக்குதலுக்குள்ளான சகோதரர் பிரபு அவர்களை, பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். சகோதரர் பிரபு அவர்களுக்கு உறுதுணையாக, தமிழக பாஜக எப்போதும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Indian navy: 12 மணிநேர போராட்டம்!… சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் மீட்பு!… இந்திய கடற்படை அதிரடி!

Sat Mar 30 , 2024
Indian navy: அரபிக்கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை 12 மணிநேர போராட்டத்திற்கு பின் இந்திய கடற்படை மீட்டுள்ளது. இஸ்ரேலுடனான மோதலில் ஹமாஸுக்கு உதவுவதற்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இந்திய, அரேபிய மற்றும் செங்கடல்களில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைத் தாக்கி வருவதோடு கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் சரக்கு கப்பல்களை கடத்துவது, கொள்ளையடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் […]

You May Like