“ எப்படியாவது தப்பிச்சு ஓடிறனும்..” ஹெலிகாப்டர் மூலம் தப்பி செல்ல கயிற்றில் தொங்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள்.. வைரல் வீடியோ..

nepal helicopter

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 2 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்தது.. இதனால் அந்நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.. இந்த நிலையில் இன்று ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நேபாள அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..


3வது நாளை எட்டிய வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளை பிடித்து தாக்கத் தொடங்கினர்.. இதனால் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தப்பிக்க முயன்ற போது, ​​கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளை மீட்க நேபாள இராணுவம் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதை இந்த வீடியோக்களில் பார்க்க முடிகிறது..

ஒரு பயனர், “நேபாளத்தின் ஊழல் அதிகாரிகள் அவசர ஹெலிகாப்டரில் தொங்கி அவசரமாக நாட்டை விட்டு ஓடிய விதம் இதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.

வன்முறை போராட்டக்காரர்களிடமிருந்து அதிகாரிகளை மீட்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர்.. இதுதொடர்பான போட்டோக்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

செப்டம்பர் 10, 2025 நிலவரப்படி, நேபாள நாடாளுமன்றத்திலும் காத்மாண்டுவின் பிற பகுதிகளிலும் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில். இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள போராட்டம் : பின்னணி

நேபாள அரசு பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் தடை செய்யப்பட்டன.. இதை எதிர்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.. இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.. இருப்பினும், சீற்றத்திற்குப் பிறகு, சமூக ஊடக தளங்கள் மீதான தடை ரத்து செய்யப்பட்டது, ஆனால் அதுவும் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை, இது மேலும் வன்முறையாக மாறியது.. இந்த போராட்டம் நேபாள நாட்டில் ஊழலுக்கு எதிராக மாறியது.

நேற்று, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ‘ஊழலுக்கு’ எதிரான வன்முறை போராட்டங்கள் மற்றும் சமூக ஊடக தடைக்குப் பிறகு தனது ராஜினாமாவை வழங்கினார்.

போராட்டங்கள் 3வது நாளை எட்டியதால், நேபாளத்தில் போராட்டக்காரர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தாக்க அவர்களை தேட தொடங்கினர். நாட்டின் அரசியல் உயரடுக்கின் மீதான பரவலான விமர்சனங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மக்கள் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

நேபாள ராணுவம் நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 24 மணி நேர முடக்கத்திற்குப் பிறகு, நேபாள போராட்டம் மெதுவாக கட்டுக்குள் வந்ததால், காத்மாண்டு விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.. இதனிடையே நேபாளத்தின் இடைக்கால அரசாங்க தலைவராக தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : #Breaking : Gen Z போராட்டம் : நேபாளத்தின் இடைக்கால தலைவராக சுசீலா கார்கி தேர்வு.. யார் இவர்?

RUPA

Next Post

தீராத தோல் வியாதிகளை குணப்படுத்தும் கஞ்சமலை சித்தர் கோவில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?

Thu Sep 11 , 2025
Miraculous herbal wells.. A miraculous temple that cures incurable skin diseases..!! Do you know where it is..?
temple 5

You May Like