இரவில் ஓயாது தொல்லை செய்த மாற்றான் தந்தை.. ஓட ஓட விரட்டி கொலை.!

சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகே புத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயதான கிருஷ்ணராஜ் என்பவர் முதல் மனைவி பிரிந்த நிலையில் இரண்டாவதாக மீனா என்ற பெண்ணை 19 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்.


மீனாவுக்கு தற்போது, 26 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருக்கின்றார். சிறு வயதில் இருந்தே தனது மகனைப் போலவே கிருஷ்ணராஜ் அவரை வளர்த்து வந்துள்ளார். கிருஷ்ணராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு நேரத்தில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மது பழக்கத்திற்கு அடிமையான அவரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எனவே, மீனாவிடம் தகராறு செய்த கிருஷ்ணராஜ் மீது விக்னேஷ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். சம்பவ தினத்திலும் அதுபோல மீனாவிடம் கிருஷ்ணராஜ் வம்பு இழுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மீன் வெட்டும் கத்தியை எடுத்து கிருஷ்ணராஜை தாக்க ஆரம்பித்தார். அலறி அடித்து அங்கிருந்து கிருஷ்ணராஜ் ஓட அவரை விரட்டி விரட்டி சென்று கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார் விக்னேஷ்.

1newsnationuser5

Next Post

ஒன்றரை வயது பெண் குழந்தை உடலெங்கும் பல் தடம்! கடித்து வைத்த சைக்கோ!

Fri Jan 27 , 2023
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகெங்கிலும் இருக்கக்கூடியவர்களை பதற செய்திருக்கிறது. ப்ளே ஸ்கூல் சென்ற ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் தான் அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாது எல்லோரையும் பதறச் செய்து இருக்கிறது . அமெரிக்காவின் ஹரிஜோனா மாகாணத்தைச் சார்ந்தவர் அலைஸ் பிரயண்ட். இவரும் இவரது கணவரும் வேலைக்குச் சென்று வருவதால் தங்களது ஒன்றரை வயது குழந்தையை அருகில் இருக்கும் ப்ளே ஸ்கூலில் பராமரிப்பில் […]
Screenshot 20230127 202101 373

You May Like