மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தற்போது இந்தியாவின் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால் நுகர்வோர் நிம்மதி அடைந்துள்ளனர், அதே சமயம் பிரீமியம் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. மார்ச் 20, 2026 முதல், எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளன. சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். அவற்றின் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணி உருவாக […]
மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்கள், நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சிறந்த தேர்வாக விளங்குகின்றன. இத்திட்டங்களில், உத்தரவாதமான வருமானத்துடன் சேர்த்து, எவ்விதச் சிரமமுமின்றி வரி விலக்கும் கிடைக்கிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வுக்காலத் தேவைகளுக்கு இது பேருதவியாக அமையும். மேலும், நமது அஞ்சல் நிலையங்கள் தற்போது கடிதங்களை விநியோகிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கிச் சேவைகளையும் வழங்கி வருகின்றன. அஞ்சல் […]
Ola எலக்ட்ரிக் நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ், S1 Pro+ மற்றும் Roadster போன்ற மாடல்களுக்கு ரூ. 30,000-க்கும் அதிகமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், 8 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Warranty) மற்றும் சிறப்பு ‘முகூர்த்தச் சலுகைகள்’ ஆகியவையும் இதில் அடங்கும். குறிப்பிட்ட சில மாடல்கள் ரூ. 99,999 என்ற மிகக் குறைந்த விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். […]
காதல், திருமணம், ஆடம்பரம், கேளிக்கை, மகிழ்ச்சி, இன்பம், பகட்டு மற்றும் அலங்காரம் போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்குக் காரகனாகத் திகழும் சுக்கிரன், இம்மாதம் 26-ஆம் தேதியன்று தனது உச்ச வீடான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசியானது சுக்கிரனுக்கு ஒரு சாதகமான இடமாக இல்லாவிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது ‘ராஜ யோகங்களையும்’, ஆடம்பரமான வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் வழங்கும். ஏப்ரல் 19 வரை […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை […]
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நயீனி, இஸ்ரேலிய-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்தப் படை உறுதிப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், நயீனி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அலி முகமது நயீனியின் மரணம் நிகழ்ந்துள்ளது. […]
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று, பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்த்தி உள்ளன.. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BPCL) ‘Speed’, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) ‘Power’ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) ‘XP95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் […]
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. இதில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது.. பாமக மாம்பழம் சின்னத்தில் 23 தொகுதிகளிலும், பாஜக தாமரை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டன.. ஆனால் த.மா.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரம் ஆகிய கட்சிகள் இரட்டை […]
நமது உடல்நலத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் சில சமயங்களில் பெரிய ஆபத்துகளின் அறிகுறிகளாக அமையலாம். குறிப்பாக, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை பலர் ஏதேனும் தொற்று அல்லது உடல் சூடு காரணமாகவே ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். ஆனால், ஐரோப்பிய சிறுநீரியல் சங்கத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் முதல் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கக்கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்நிலை மோசமடைந்து, வெறும் 90 நாட்களுக்குள் […]

