கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் […]
தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் .. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் பொல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.. இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து […]
கடலூரில் 66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 66,000 […]
காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது..எனினும் மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் […]
தருமபுரியில் பென்னாகரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உயரிழந்தனர்.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த, நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் பொல் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.. இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.. இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]
நியூசிலாந்தில் இன்று காலை 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் வியாழக்கிழமை காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் -30.34 அட்சரேகை மற்றும் -175.17 தீர்க்கரேகையில் 41 கிலோமீட்டர் ஆழத்தில் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் இருந்து, 300 கிமீ வரம்பிற்குள் மக்கள் வசிக்காத, அருகில் உள்ள தீவுகளுக்கு […]
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய போட்டியாளர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். நோபல் பரிசு குழு என்பது, நோபல் பரிசு வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவாகும். இந்த குழு இந்தியா வந்துள்ள நிலையில், அக்குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், உலகின் அமைதியின் மிகவும் நம்பகமான தலைவர்களில் பிரதமர் மோடியும் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.43,400-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. எனவே தங்கம் விலை […]
கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக […]
ஸ்மார்ட்போன் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில், பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சில செயலிகள் (pre-installed apps) நிறுவப்பட்டிருக்கும்.. நாமே நினைத்தாலும், அந்த செயலிகளை அன் இன்ஸ்டால் செய்ய முடியாது.. இந்த சூழலில், இந்த செயலிகள் மூலம் உளவு பார்ப்பது மற்றும் செயலிகள் மூலம் பயனர் தரவை தவறாகப் பயன்படுத்துவது போன்ற சைபர் குற்றங்கள் நாட்டில் […]