கொரோனாவின் தோற்றத்தை கண்டுபிடிப்பது, எதிர்கால தொற்றுநோய்களை தடுக்க உதவும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. […]

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த […]

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார், சிநேகலதா தீட்சித் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 91.. மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனே இதுகுறித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.. அதில் “எங்கள் அன்பிற்குரிய அம்மா,, சிநேகலதா தீட்சித், இன்று காலை தனது அன்புக்குரியவர்களால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக காலமானார்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.. சிநேகலதா தீட்சித்தின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் சுமார் […]

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு போலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் […]

டயர் வெடிப்பது கடவுளின் செயல் அல்ல, மனித அலட்சியம் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், கார் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது. அக்டோபர் 25, 2010 அன்று, மகரந்த் பட்வர்தன் (38)என்பவர் தனது இரண்டு சக ஊழியர்களுடன் புனேவிலிருந்து மும்பைக்கு பயணம் செய்தார். அந்த சக ஊழியர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வேகமாகச் சென்றதால், பின் சக்கரம் வெடித்து, […]

பிரபல மலையாள இசையமைப்பாளர் என்.பி.பிரபாகரன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. மலையாள இசையமைப்பாளர் என்.பி. பிரபாகரன் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.. அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.. ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சொந்த ஊரான திருவஞ்சூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.. அங்கு […]

இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி வெடித்ததில் எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.. இந்தோனேசியாவில் சுமார் 130 எரிமலைகள் ஆக்டிவாக உள்ளன.. இதனால் அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.. இந்த நிலையில் அந்நாட்டின் கலாச்சார தலைநகரான யோககர்த்தாவிற்கு அருகில் உள்ள ஜாவா தீவில் அமைந்துள்ள மெராபி எரிமலை நேற்று வெடித்தது.. இதானால் சுமார் 7 கிலோமீட்டர் (4.3 மைல்கள்) வரை சூடான சாம்பல் […]

அதிகாலையில் எழுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.. எனவே தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் அலாரம் வைப்போம்.. ஆனால் அதிகாலையில் நமது அலாரம் அடிக்கத் தொடங்கும் போது நாம் எழுந்திருக்காமல், snooze செய்துவிட்டு மேலும் சில நிமிடங்களுக்கு நாம் தூங்குவோம்.. பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் பொதுவான விஷயம் இது… 3 பேரில் ஒருவர் காலையில் எழுவதர்கு முன் snooze பட்டனை 3 முறை அழுத்துவதாக […]

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு, மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும், உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா போர்வீரர்களின் இருப்பிடமாகவும் உள்ள Xi’an நகரத்தில் தீவிர காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் நெரிசலான இடங்களை மூடுவதற்கான அவசர உத்தரவை பிறப்பிக்க […]

H3N2 பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் […]