இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆபத்தில் உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மோடியின் இறுதித் தாக்குதல் தொடங்கியது’ (Modi’s Final Assault on India’s Press Freedom Has Begun’) என்ற தலைப்பில் நியூடார்க் டைம்ஸ் நாளிதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி “காஷ்மீரி பத்திரிகையை அழித்துவிட்டார்” மற்றும் “ஊடகங்களை அரசாங்க ஊதுகுழலாக பணியாற்ற மிரட்டுகிறார்” என்று […]

H3N2 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு மார்ச் இறுதி முதல் குறையத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை […]

2023 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் அடுத்த மாதம் 20-ம் தேதி நிகழ உள்ளது.. சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு […]

கடை உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வாகன நம்ப ர்பிளேட்டுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டாம் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல வாகனஓட்டிகள் தங்களது விருப்பத்துக்கேற்ப நம்பர் பிளேட்டுகளில் படங்கள், ஸ்டிக்கர்களை ஒட்டுதல், பலவித வடிவங்களில் எழுத்துகளைப் பதிவிடுதல் என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுகின்றனர். ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண்களை எழுதியிருக்க வேண்டும். இந்த நிலையில், சட்டவிதிகளுக்கு முரணாக விதிகளை மீறி […]

H3N2 இன்புளுயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் பரவல் நாட்டில் புதிய எச்சரிக்கையாக உள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.. இந்த புதிய வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் […]

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, உடல் வலி என கொரோனா போன்ற அறிகுறிகளுடன் இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. எனினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர், சுவாச […]

ஆஸ்கர் விழாவில் பேச வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை அகாடமி நிராகரித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வரும் 12-ம் தேதி 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போர் குறித்து உரையாற்ற உக்ரைன் அதிபர் ஜெலனஸ்கி திட்டமிட்டிருந்தார்.. ஆனால் ஆஸ்கர் விழாவில் பேச வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.. ஆனால் அவரின் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.41,520க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, […]

பணவீக்கம் அதிகரித்து வருவதால் வாழ்க்கைச் செலவும் விலைவாசி அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் எதிர்காலத்தைப் பற்றி, குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் கவலை ஏற்படும்.. ஆனால் சில ஆண்டுகளுக்குள் உங்களை ஒரு லட்சாதிபதியாக மாற்றும் வழிகளில் ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம்.. தேசிய ஓய்வூதிய திட்டம், அல்லது […]