உக்ரைன்-ரஷ்யா போரை கையாண்ட விதத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நெருங்கிய வட்டத்தில் நபர்களால் படுகொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பத்திரிக்கையாளர் டிமிட்ரோ கொமரோவ் இயக்கிய ‘Year’ என்ற ஆவணப்படத்தில் உக்ரைன் அதிகர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் “ரஷ்யாவில் புடினின் ஆட்சியின் பலவீனம் உணரப்படும் ஒரு தருணம் நிச்சயமாக இருக்கும். அப்போது மாமிச உண்ணிகள் மாமிசத்தை உண்பார்கள். இது மிகவும் முக்கியமானது.. […]

செயற்கை இனிப்புகள் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை குறைக்க முயற்சிக்கும் மக்கள், தங்கள் உணவில் செயற்கை இனிப்புகளை பரவலாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஜீரோ கலோரி இனிப்புகளில் உள்ள எரித்ரிட்டால் என்ற மூலப்பொருள் இரத்த உறைவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன… நேச்சர் என்ற மருத்துவ இதழில், க்ளீவ்லேண்ட் கிளினிக் லெர்னர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் […]

ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் […]

பிஎஃப் பயனர்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் EPFO வழங்குகிறது.. EPFO அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. ஒவ்வொரு மாதமும் […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC–upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி […]

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை குஷ்பு. நாட்கள் செல்ல செல்ல, திரை பயணத்தில் இருந்து அரசியல் களத்தில் இறங்கினார். அதனை தொடர்ந்து திமுகவில் சேர்ந்த குஷ்பு, பிரசாரத்திற்கு அனுப்பப்பட்டார். திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் குஷ்புக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.. இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு குஷ்பு பாஜகவில் இணைந்தார்.. […]

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இந்நிலையில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை கூறியுள்ளது. அமெரிக்க […]

தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சவடி எண் 138, 139-ல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.. 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.41,608க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

அறிமுக மலையாள இயக்குனரான ஜோசப் மனு ஜேம்ஸ் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 31. 2004-ம் ஆண்டு சாபு ஜேம்ஸ் இயக்கத்தில் உருவான I am Curious என்ற படத்தின் மூலம் ஜோசப் மனு ஜேம்ஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றினார். இந்நிலையில் நிமோனியா பாதிப்பு காரணமாக […]