சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு நடைபெற்றது.. இந்த பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டவாறு பேசினார்.. அப்போது “ பாமகவில் 95% மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்.. சட்டம்னற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். வெற்றி நிச்சயம்.. அன்புமணி பக்கம் 5% பேர் கூட இல்லை.. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.. ஆனால் […]
தேநீரைத் தயாரித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குடித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு தேநீர் அருந்துவது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும், பலர் தேநீரை ஒருமுறை தயாரித்துவிட்டு, அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நீங்களும் இப்படித்தான் தேநீர் குடிக்கிறீர்களா…? இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் ஒருபோதும் தேநீரைத் […]
தங்கத்துடன் சேர்ந்து, வெள்ளியும் 2025-ஆம் ஆண்டில் முதலீட்டு உலகில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை இந்த நாட்களில் சுமார் 2.40 லட்சம் ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது என்பதே சந்தையில் உள்ள தேவையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், இந்த வெள்ளிக்குப் பின்னால் உண்மையான சக்தி எந்த நாட்டுக்கு இருக்கிறது […]
களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என பேசிய விஜய்க்கு அதிமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.. “ வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம்.. இன்று கூட்டணி அமைத்திருக்கும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா? இதே திமுக அன்று பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்.. […]
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அமெரிக்க நீதித்துறை அமைச்சகம், எப்ஸ்டீன் பயன்படுத்திய அமேசான் கணக்கில் இருந்து பெறப்பட்ட 1,006 மின்னஞ்சல் ரசீதுகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. இந்த ரசீதுகள் 2014 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கானவை என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. எங்கு பொருட்கள் அனுப்பப்பட்டன? இந்த ரசீதுகளில் உள்ள பொருட்கள், நியூயார்க் மான்ஹாட்டனில் […]
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அறியப்படும் இந்தியாவில், கடந்த சில தசாப்தங்களாக மக்கள்தொகை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டுக்குள், இது 1.46 பில்லியனாக இருக்கும். இந்த எண்ணிக்கை சீனாவை விஞ்சிவிடும். இருப்பினும், இது கருவுறுதல் விகிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை எதிர்கொள்கிறது. இந்த போக்கு எதிர்காலத்தில் நாட்டிற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2025-ஆம் ஆண்டுக்குள், உலகளவில், குறிப்பாக இந்தியாவைப் […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தெற்கு மெக்சிகோ மாநிலமான ஓக்ஸாகாவில் கடலுக்கு இடையேயான ரயில் தடம் புரண்டதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் மொத்தம் 250 பயணிகள் இருந்தனர். இவர்களில் 241 பேர் வழக்கமான பயணிகள் மற்றும் ஒன்பது பேர் ரயில் பணியாளர்கள். விபத்துக்குப் பிறகு 193 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், 98 பேர் காயமடைந்ததாகவும் […]
உலகின் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னால், கடன்கள், முதலீடுகள் மற்றும் சர்வதேச நிதி ஒத்துழைப்புகள் இணைந்த ஒரு சிக்கலான அமைப்பு உள்ளது. இந்தியா அதிக கடன் வாங்கும் நாடா, அல்லது பொறுப்புடன் கடன் நிர்வகிக்கும் நாடா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இந்தியாவுக்கு அதிகமாக கடன் வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எவை? அதே நேரத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு எப்படி உதவிகளை வழங்குகிறது? […]

