பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதை, ஓசி பயணம் என்று கூறியது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து […]

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2’ எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, புடினின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.. எனினும் எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.. இதனிடையே பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.37,576-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மீதும், அவரின் மகன் மீதும், மருமகள் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.. தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் மகன் பிரபு திலக்… மருத்துவரான இவர் சில படங்களையும் தயாரித்துள்ளார்.. கடந்த 2007-ம் ஆண்டு ஸ்ருதி என்ற பெண்ணை பிரபு திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி மீது திலகவதி குடும்பத்தினரும், கணவர் மாமியார் மீது ஸ்ருதியும் […]

என்ன தான் நம் நாட்டிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும், வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் மட்டும் இன்னும் மக்களிடம் குறைந்தபாடில்லை.. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.. தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு காரணங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.. அதுவும் துபாய் நாட்டில் தங்கம் வாங்குவதற்கே அதிகமானோர் விரும்புவதாக கூறப்படுகிறது.. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் […]

திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், திருப்பதி […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி உள்ளது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் […]

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் இந்த பண்டிகை காலத்தில் அதன் ஸ்கூட்டர் வாங்க கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக கருதப்படுகிறது.. ஓலா […]

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 […]

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது.. பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட திட்டமிடுவார்கள்.. இதனால் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே […]