தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் சுமார் 9,000 மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர் என்று ஈஷா மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’என்ற பெயரில் […]

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக பிரத்யேக `பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. எர்ணாகுளத்தில் உள்ள ஐஆர்சிடிசி பிராந்திய அலுவலகம் சார்பில் ஆடி மாதம் `புண்ணிய தீர்த்த யாத்திரை (SZBG06)’ என்ற பெயரில் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […]

மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அல்வாரோ தன் மனைவியை கடந்த ஜூன் 29ஆம் தேதி கொலை செய்து உள்ளார். […]

லூதியானா ஓட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் முழு எலி இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியு்ளளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், விவேக்குமார் என்பவர், கடந்த வாரம் குடும்பத்துடன் உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மட்டன் போன்ற அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகமும் அவர் ஆர்டர் செய்த உணவு வகைகளை ஊழியர் மூலம் வழங்கியுள்ளது. அவர்கள் சாப்பிடும் வேளையில், மட்டன் குழம்பு பரிமாறப்பட்டதாகத் […]

புதுக்கோட்டை பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியர். இவர்களது மகன் அருணகிரி என்ற அருண் பிரசாத் (22) என்பவர் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் வேலைக்காக சென்றுள்ளார். இந்விலையில், அங்கு அவர், கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி நிமித்தமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹனியா என்ற அன்னாரில்ஸிகா என்ற பெண்ணுடன் […]

வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. தனது மூன்றாவது படமாக இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இயக்கியிருந்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், லால், அழகம் பெருமாள், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புப் பெற்றது. மேலும், இப்படம் வெளியான நேரத்தில் […]

வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரில் இந்திய அனிக்கு தேர்வாகியுள்ளார் மின்னு. வயநாட்டில் உள்ள பழங்குடி சாதிகளில் ஒன்றான குரிச்சியா இனத்தைச் சேர்ந்தவர் மின்னு. சிறுமியாக இருக்கும் போதே கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக அருகிலுள்ள மைதானத்திற்கு செல்லத் தொடங்கினார். இதற்கே அவர் தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்த வயதில் இவருக்கு துணையாக கிரிக்கெட் விளையாட பெண்கள் யாருமே இல்லை. இதனால் இவரது வீட்டின் அருகாமையில் […]

போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தருமன். விவசாயியான இவர் வெளியூர் சென்று வரும்போது தனது நண்பர் பரிசளித்ததாக பிரம்ம கமலத்தை தனது வீட்டில் நட்டு பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து இந்த செடியிலிருந்து பூக்கள் பூத்துள்ளது. மொட்டாக இருந்து பூ இரவு 10 மணிக்கு மேல் நன்றாக மலர்ந்த நிலைக்கு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதிக நறுமனத்தை வெளிப்படுத்தியது. பூக்கள் பூப்பதை எதிர்பார்த்து காத்திருந்த குடும்பத்தினர் […]

இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போதைய வர்த்தக கட்டமைப்பில் அனைத்து வர்த்தகமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வேளையில் தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட்டால் பெரும் தடுமாற்றம் வரும் என்பதை உணர்ந்தார். இதை டெஸ்ட் செய்யும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது ஆரம்பக்கட்ட வளர்ச்சி பாதையில் இருக்கும் தனது நிதி சேவை பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் […]

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் 2வது மகளான அதிதி ஷங்கர், கடந்தாண்டு கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடிப்படையில் மருத்துவரான அவர், சினிமாவுக்குள் நுழைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விருமன் படம் அதிதிக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.  இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் […]