அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் திமுக முனைப்பாக இருக்கிறது. அகில இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதனால்தான் திமுக அமைச்சர்களை குறி வைக்கிறார்கள் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை பார்த்து […]

இம்மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் ஜூலை 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டொமினிகாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் ஓவல் பார்க் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. […]

தற்போது நம் அத்தனை கற்பனை காட்சிக்கும் உயிரூட்டும் வகையில் ரோட்டில் பயணித்து ஆகாயத்தில் பறந்து செல்லும் காரை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்காவின் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனமானது இறங்கியுள்ளது. அதை சாத்தியப்படுத்துவதற்கான அத்தனை வழியையும் திறந்துவிட்டுள்ளது அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA). அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பறக்கும் கார், அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. மாடல் ஏ என அழைக்கப்படும் அந்நிறுவனத்தின் […]

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகவும் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனியார் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ஷாருக்கானுக்கு படப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அடிபட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும், உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானுக்கு மூக்கில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் பகுதிக்குட்பட்ட குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மற்றொரு சமூகத்தினர் இதுபோன்று செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என பலரும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த  மனிதாபிமானமற்ற செயலை செய்தது யார்? என்பது தெரிய வராத நிலையில், காவல்துறையினர் […]

கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு விடும். இத்திருக்கோயில் மூடப்படும் நாளில் தேவர்கள் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே […]

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.   இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா […]

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் பேங்கிங் ஆப் YONO for Every Indian அறிமுகம் செய்ததோடு, தனது ஏடிஎம் இயந்திரத்தில் புதிதாக Interoperable Cardless Cash Withdrawal (ICCW) சேவையை அறிமுகம் செய்துள்ளது.   இந்த புதிய ICCW சேவை மூலம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களும் எவ்விதமான தங்கு தடையுமின்றி […]

சென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் நாளை (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில், பண்ணை பசுமைக் கடைகளுடன், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, […]

அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது, அமலாக்கத்துறைக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், பாஜகவின் கைப்பாவை போல அமலாக்கத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர். என் ரவி நேற்று கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தான் எடுத்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி இருந்தார். […]