2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]
இன்றைய காலகட்டத்தில், எப்போது யாருக்கு மாரடைப்பு வரும் என்று தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு இன்று வயது வித்தியாசமின்றி பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.. மோசமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இவை ஆபத்தானவை. […]
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தது 2 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர். இம்பாலில் இருந்து 407 டாடா வாகனத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, மாலை 6 மணியளவில் நம்போல் காவல் நிலையப் பகுதியில் […]
நாம் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். இருப்பினும், பாலியல் வாழ்க்கை அல்லது உடலுறவு பற்றிப் பேசுவது பலருக்கு கடினமாக உள்ளது. ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே.. இவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். உடல் நெருக்கம் என்பது பாலியல் ஈர்ப்பைப் பற்றியது மட்டுமல்ல. இது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பு, இணைப்பு மற்றும் அவர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் […]
இந்த வருடம், நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. 7 நாட்கள், தேவி பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்குத் தோன்றுவார். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று தேவியை வேண்டிக்கொள்கிறார்கள். இருப்பினும், நவராத்திரிக்கு முன் சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, செல்வத்திற்கான பாதை சீராகும். நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு வீட்டிலிருந்து சில பொருட்களை அகற்றினால், எல்லாம் நன்றாக நடக்கும் […]
சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் […]
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது… சிலர் மிகவும் நல்லவர்களாக இருக்கும் நிலையில் சிலர் கெட்ட எண்ணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் இயல்பாகவே சதி செய்து வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்களை ஆளும் கிரகங்களும் ராசிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். எந்த ராசிக்காரர்கள் சதி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புடையவர்கள். நீங்கள் அவர்களை நம்பி எந்த […]
ஊட்டி, கொடைக்கானலை போல் வால்பாறையி செல்லவும் நவம்பர் 1 முதல் இ பாஸ் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.. […]
ஸ்டாண்ட் அப் காமெடியன், பல குரல் மன்னன், நடிகர் என பன்முகத் திறன் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.. ஆரம்ப காலத்தில் மேடையில் தனது மிமிக்ரி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.. சின்னத்திரையில் கவனம் பெற்ற ரோபோ சங்கர் தனுஷின் மாரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.. இதை தொடர்ந்து […]

