வருவாய்த்துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணையவழியில் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 7,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா […]

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் […]

உலகின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உருளைக்கிழங்கு கருதப்படுகிறது… இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் உருளைக்கிழக்கு பயன்படுத்தப்படுகிறது.. மலிவான விலைக்கு விற்கப்படுவதால் உருளைக்கிழங்கு பரவலாக பயன்படுகிறது.. ஆனால் உலகின் மிகவும் விலை உயர்ந்த உருளைக்கிழங்கு பற்றி தெரியுமா.. இது ஒரு கிலோவுக்கு 40,000-50,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் வருடத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே இந்த உருளைக்கிழங்கு கிடைக்கும். Le Bonnotte என்ற இந்த உருளைக்கிழங்கு. பிரான்சில் உள்ள Ile De […]

டென்மார்க் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளை கண்டுபிடித்துள்ளனர்.. இந்த இரண்டு இனங்களும் ஆபத்தானவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.. நியூ கினியாவின் காட்டில் காணப்படும் இந்தப் பறவைகள் நச்சுத்தன்மையுள்ள உணவை உட்கொண்டு அதையே விஷமாக மாற்றும் திறனை வளர்த்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.. டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் நுட் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் சமீபத்திய பயணத்தில் இரண்டு புதிய வகை விஷப் பறவைகளை அடையாளம் காண […]

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகைகள், தொடர் விடுமுறைகளின் போது சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.. அந்த வகையில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருகிறது.. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.. மேலும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது.. […]

நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி அதிகபட்சமாக ரூ.510 கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளார் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள 13 முதலமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.. நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 30 முதல்வர்களின் சுயப் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான […]

தமிழகத்தில் இன்றும் நாளையும், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.. சென்னை மற்றும் புறநகர் […]

சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை.. சபாநாயகர் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை கொடுக்க மறுப்பதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடலூரில் 6 வயது சிறுமிக்கு திமுக […]

ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வர உள்ளது. 2012 KY3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது…. சூரியனைச் சுற்றி வரும் வழியில் பூமியில் இருந்து 47,84,139 கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும் இந்த 2012 KY3 விண்கல் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இது அரை கிலோமீட்டர் முதல் […]