மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதை தொடர்ந்து சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை முடியும் வரை ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி […]
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.. தமிழகம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.. இதன் தொடர்ச்சியாக போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளரும் அறிவுறுத்தி இருந்தார்.. அதன் படி இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் […]
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக […]
புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தங்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரோசர் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. நோய் தொற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா பாதிப்பை சமாளிக்க தங்கள் தயார்நிலையை மறுபரிசீலனை செய்ய இரண்டு நாள் ஒத்திகையை தொடங்கி உள்ளன.. இந்த நிலையில் பல மாநிலங்கள் வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு […]
சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அப்போது பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.. இதுதொடர்பாக பேசிய அவர் “ தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சிஎஸ்கே அணி செய்யவில்லை.. ஆனால் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி […]
சசிகுமார் , யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பாராட்டியுள்ளார். தனத் ட்விட்டர் பக்கத்தில் […]
பசுவின் கோமியம் மனிதர்களின் உடல்நலத்திற்கு உகந்ததல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது… உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.. தொற்றுநோயியல் துறையின் தலைவராக பணியாற்றும் போஜ் ராஜ் சிங் தலைமையில் பசு மற்றும் எருமை ஆகியவற்றின் கோமியங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. அதில் “ பசு மற்றும் எருமை கோமியங்களில் மனிதர்களின் உடல்நலனுக்கு கேடு […]
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே […]
பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முக்கியமான அம்சத்தை உணர்ந்து, இந்தியாவின் முதல், ஏஆர் ஆம்புலன்ஸ் இன்று ( ஏப்ரல் 11) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. உதவி ரியாலிட்டி (assisted reality) ஆம்புலன்ஸ் என்ற AR ஆம்புலன்ஸ், நோயாளியுடன் வரும் மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்க உதவும். கொச்சியை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான அபோதெகரி மெடிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, […]