சமூக வலைத்தளங்களில் சித்த மருத்துவ குறிப்புகளை கூறி பிரபலமானவர் சித்த மருத்துவர் ஷர்மிகா.. பல யூ டியூப் சேனல்களும் இவரிடம் தொடர்ந்து பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பியதால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.. ஆனால் ஒரு கட்டத்தில் ஷர்மிகா வழங்கிய பல்வேறு மருத்துவக்குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. குறிப்பாக பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும்.. ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடிவிடும்.. நுங்கு […]
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. ஹல்ட்வானியில் உள்ள சிறையில் ஹெச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசீலா திவாரி மருத்துவமனையின் மருத்துவர் பரம்ஜித் சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. டாக்டர் சிங் இதுகுறித்து பேசிய போது “ ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு […]
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.. ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியினால் இலட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் திமுக […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படக்குழு சென்னை திரும்பி உள்ளது.. மே மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.. மேலும் இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதால், இப்படத்தின் […]
நாட்டின் பொருளாதார நிலையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலாக போலி ரூபாய் நோட்டுகள் உள்ளன.. எனவே போலி இந்திய ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உண்மையான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்கள் கையில் உள்ள ரூ.100, 500 அல்லது 2000 […]
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நோய் பரவுவதாகவும்க் கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை […]
கொரோனா மனிதர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா பரவி 3 ஆண்டுகளை கடந்தும் அந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. நாளை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் 6,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]
இந்தியாவில் தங்கம் என்பது, பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.. இருப்பினும், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது. நீண்ட காலமாக, தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியா 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து 4 இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தங்கத்தை வீட்டில் […]