சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 5000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது […]

இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.. பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இதில் இயற்கை எரிவாயு, சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் வரும் சமையல் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த உச்சவரம்பு விலையை விதித்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் “ இயற்கை எரிவாயு, அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா […]

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் இன்று அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 5000-ஐ தாண்டியது… இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. இது […]

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி, சென்னை, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கவும், சென்னை, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கவும் சென்னை வருகிறார்.. […]

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக மக்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். […]

ராகுல்காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ அமிதேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ அமிதேஷ் சுக்லா, ராகுல்காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமிதேஷ் சுக்லா, மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையே பல ஒற்றுமைகள் […]

நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று தெரிவித்தார்.. மேலும் “ […]

வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.. டெல்லியை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த் உம்ராவ் என்பவர், கடந்த மாதம் 3-ம் தேதி, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கப்படுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் […]

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]