மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் நாளை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 4) மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.. இது சமண மதத்தை சேர்ந்த மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது.. சமண சமயத்தின் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த நாளை சமண மக்கள் கொண்டாடுகின்றனர்.. மகாவீர் ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி, மகாவீரர் […]

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. […]

கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட […]

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. […]

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் […]

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்று முன்னணி உயிரியலாளர் சேகர் மாண்டே தெரிவித்துள்ளார்.. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முன்னாள் இயக்குநரும், முன்னணி உயிரியலாளருமான சேகர் மாண்டே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் “கொரோனா பூஸ்டர் தடுப்பூசியின் நன்மை பற்றிய அறிவியல் சான்றுகள் பலவீனமாக உள்ளன.. எனவே பூஸ்டர் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்காது.. குறைந்த நோய் […]

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்துள்ளார்.. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி அமர்வு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளரை எதிர்க்கும் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராரக எடப்பாடி […]

12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நீக்கி உள்ளது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி முகலாய பேரரசு தொடர்பான அத்தியாசங்களை நீக்கி உள்ளது.. இது CBSE, மற்றும் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிற மாநில வாரியங்கள் உட்பட அனைத்து வாரியங்களின் பாடத்திட்டத்தில் […]

கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது.. இந்த கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.. இருகட்சிகளின் தலைவர்களும் அவ்வப்போது கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி தொடர்ந்தால், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]