இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கு இடையேயான ஒழுங்குமுறை நெறிமுறைகள் குறித்த மதிப்பீடுகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997 பிரிவு 11 (1) (பி) பிரிவின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிப்பதற்கு […]
மத்திய / மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் வீடு தேடி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1-ம் தேதி முதல் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, மின்னணு […]
6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் […]
தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூ.16,79,482 விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மாநிலங்களுக்கு ரூ.43.22 லட்சம் மதிப்பிலான காப்புரிமையுடன் கூடிய அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இந்திய உயிரியல் வளங்களை பயன்படுத்தி காப்புரிமைகளை பெறுவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளை வர்த்தக மயமாக்குவதற்கும், அறிவுசார் சொத்துரிமை பயன்பாடுகளிலிருந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, […]
தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்; தமிழகம் முழுவதும் 4 லட்சம் பொறுப்பாளர்கள் உள்ளனர். மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை ஒவ்வொரு அணியும் சொல்லும் அளவிற்கு 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். 2024-ம் […]
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு […]
உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]
டெல்லி வெடி விபத்து சம்பந்தமாக டெல்லி காவல்துறையினர் சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து […]
பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் சிறிதளவு அதிகரித்து 55.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.7 சதவீதமாக உள்ளது. இது […]

