இன்று நடைபெற்ற தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் அணிந்து வந்த ஆடை அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்தனர். அதன் பிறகு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் […]

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விவகாரம். தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்று பெரும் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக தலைமை சார்பாக தேர்தல் ஆணையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த […]

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ .சண்முகம் விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என கூறினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தவெக-விற்கு வாக்களித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போதைய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவைக்கு கொண்டு வர திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன் பிறகு வரும் இடைத்தேர்தலில் மு,க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக […]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அரவிந்த் ஆகாஷ் 50 வயதை நெருங்கிய நிலையில், தனது திருமணத்தை கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.திருமணத்தை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக செய்து கொண்டார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகின்றது. பஞ்சாபைச் சேர்ந்த அரவிந்த் ஆகாஷ், நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய […]

பெண் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக்கட்டமாக அமைவது முதல் மாதவிடாய். இது ஒரு இயல்பான உடல் வளர்ச்சி நிகழ்வு மட்டுமல்ல; உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த கட்டத்தில் குழந்தைகள் குழப்பம் அல்லது பயம் உணர வாய்ப்பு உள்ளது. அதனால், பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். மாதவிடாய் திடீரென வருவதில்லை, பொதுவாக 10–15 வயதுக்குள் தொடங்கும். சராசரி […]

கோலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் , ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்லுவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகள் அனைத்திலும் சோதனை நடைபெறும். பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு அல்லது கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA)2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.தற்போது அது ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக “VB G RAM G” என்ற புதிய சட்டம் இன்று(ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 100 நாள் வேலை திட்டம்(MGNREGA) கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]

2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி: கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைதளங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து […]