பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட் இன்று விண்ணில் பாய தயாராக உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. இந்த வணிக ரீதியான ஏவுதல் பணிகளை இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த அரசு நிறுவனம் தயாரித்துள்ள டெலியோஸ் 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. 741 […]

கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் இளைஞர்களுக்கு குறிப்பாக, பின்தங்கிய கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் விளையாட்டை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், 2023-24-ம் ஆண்டுக்கு பல்வேறு விளையாட்டுகளில் தகுதிவாய்ந்த, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு […]

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் […]

சேலம்‌ மாவட்ட விவசாயிகள்‌ அனுமதி பெற்று ஏரிகளில்‌ வண்டல்‌ மண்‌ எடுத்து விவசாயப்‌ பணிகளுக்கு பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு சிறு கனிம விதிகளின்படி, பொதுப்பணித்துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ பராமரிப்பில்‌ உள்ள ஏரிகளிலிருந்து விவசாயிகள்‌ விவசாய பணிகளுக்கு வண்டல்‌ மண்‌ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சேலம்‌ மாவட்டத்தில்‌ பொதுப்‌ பணித்துறை மற்றும்‌ ஊராட்‌ சிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer – I, பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 5 […]

உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என கருதப்படும் ஸ்டார் சிப் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ஆனால் இது ஒரு வெற்றிகரமான சோதனை என SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது. Space X நிறுவனம் இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டை வியாழன் காலை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ரொக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் […]

இன்று தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌; தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளி மண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்கு திசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ […]

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் கூறியதாவது; இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத […]

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட உத்தரவு நிரந்தரம் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கவும் […]

சூடான் நாட்டில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1,800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அரசு விளக்கம் அளித்துள்ளது. கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டில் உணவு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்த […]