19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் […]
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் […]
நாட்டின் குற்றவியல் நீதிமுறையை விரிவாக ஆய்வு செய்வது தேவை என மத்திய உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அதன் 146-வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 111-வது, 128-வது அறிக்கைகளும் அளித்துள்ளன. மக்களை மையப்படுத்திய சட்டக்கட்டமைப்பை உருவாக்கவும், அனைவருக்கும் நியாயமான, விரைவான நீதி கிடைக்கச் செய்வதற்கும் நாட்டின் குற்றவியல் சட்டங்களில் ஒருங்கிணைந்த மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், பங்குதாரர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து இந்தியத் தண்டனைச் […]
துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 46 எல்லைப்புற பகுதிகளின் விரிவான வளர்ச்சிக்காக மத்திய அரசின் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் மாநிலங்களும் லடாக் யூனியன் பிரதேசமும் அடங்கும். இத்திட்டத்திற்கு 2022-23ம் ஆண்டு முதல் 2025-26ம் நிதி ஆண்டு வரை 4,800 கோடி […]
ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் […]
புதிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகம் முதல்வர் என் ரங்கசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த வாரத்தில் சுமார் 400 […]
அரியலூரில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை […]
மின் இணைப்பை விரும்பாமல் பின்னர் விருப்பம் தெரிவித்த கூடுதல் வீடுகள் உட்பட சௌபாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மின் இணைப்பு பெறாத அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் ஏழ்மையான நகர்ப்புற வீடுகள் அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2017 அக்டோபரில் பிரதமரின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 31.03.2022 நிலவரப்படி இந்தத் திட்டத்தின் மூலம் தொடக்கத்தில் மின் இணைப்பை […]
அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வயது நபரும், இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதே போல, இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த வாழுமிடம் போன்ற விதிமுறையையும் ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல்வேறு […]
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]