நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது. பிரதமர் மோடியால் ஜனவரி 13ம் தேதி வாராணாசியில் இருந்து கொடியசைத்துத் துவைக்கிவைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்பி கங்காவிலாஸின் பயணம் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இதையொட்டி, கப்பலுக்கு வரவேற்பு நிழ்ச்சியை நடத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும், […]
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 1-ம் தேதி […]
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்ற அந்த செய்தி முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக […]
மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையையும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:“மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை […]
ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது என்ற தகவல் போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக மாணவர்கள் விளையாட்டாக ரூபாய் நோட்டுகளில் தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பெயர்களையோ அல்லது கையொப்பம் விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நோட்டுக்களை பார்த்தால் பலர் கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. […]
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் 1,083 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1,083 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 3-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1,083 காலி பணியிடங்களுக்கு […]
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது நாட்டின் நில அதிர்வு தீவிரம் அளவுகோலான 7 இல் 5 ஆக குறைந்தது என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் வடக்கு தீவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தை 61 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது என்று ஜப்பானின் புவி அறிவியல் மற்றும் பேரிடர் தாங்கும் தேசிய ஆராய்ச்சி […]
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்,அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.02.2023 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Consultant பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரேயொரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள […]
சென்னை – மதுரை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்க வேண்டும் என தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இந்த கோரிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவிடம் கடந்த […]