மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் 2022 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17-ம் தேதிக்குள் https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2023-ம் ஆண்டு ஜனவரி […]

வரும் 15.02.2023 அன்று சென்னை தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவன வளாகத்தில்‌ தொழில்‌ முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்‌ நடைப்பெற உள்ளது. இந்த முகாம்‌ காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம்‌ 1.30 மணி வரை நடைபெறும்‌. சுயமாக தொழில்‌ தொடங்க விரும்பும்‌ 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ இந்த முகாமில்‌ கலந்து கொள்ளலாம்‌. முதல் கட்டமாக, சொந்தமாக தொழில்‌ தொடங்குவதில்‌ உள்ள நன்மைகள்‌,தொழில்‌ வாய்ப்புகள்‌, தொழிலை தெரிவு […]

உபரி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய செய்யும் நடைமுறை பல்லாண்டுகளாக அரசு வகுத்துள்ள விதிகளின்படி வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற நடைமுறை குறித்து வழக்கு ஒன்றில்., அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு […]

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது; 2014 ஆம் ஆண்டில் 377-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 655 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்தம் 69 சதவீத உயர்வாகும். இதேபோல், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, 2014 […]

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Officers, IT Officer பணிகளுக்கு என மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் […]

கோதுமை, மைதா போன்றவற்றின் விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தை திட்டம் மற்றும் மாநில அரசுகள் கேந்திரிய பந்தர், தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த […]

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜிஎஸ்ஆர் 90(இ) நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப அவர்களது நகர்தலுக்கு பொருத்தமான வகையில் மோட்டார் வாகனங்களை தேர்வு செய்து வாகனப்பதிவு செய்து கொண்டு, பின்னர் தங்களுக்கான பிரத்யேக வசதிகளை வாகனங்களில் ஏற்படுத்திக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இத்தகைய […]

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா சாலையில் ஆன்லைன் இறைச்சி வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநரை போலீஸார் கைது செய்து, மேலும் இருவரைத் தேடி வந்தனர். தலைமறைவான இரு குற்றவாளிகளும் மொபைல் பேமெண்ட் சேவைகள் மூலம் பணத்தை பெற்று வாடிக்கையாளர்களுக்கு ஹோட்டல் அறைகளை பதிவு செய்து கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களை ஆட்டோரிக்ஷாவில் அனுப்பி வந்ததாக காவல் ஆய்வாளர் கூறினார். ரகசிய தகவலின் பேரில் போலீசார் முன்பதிவு […]

நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் பதில் அளித்து பேசிய அவர்; தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு- முதுகலை பட்டதாரி (NEET PG 2023) ஒத்திவைக்கப்படாது என்று தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் தேர்வு மற்றும் கவுன்சிலிங் செயல்முறைகளில் மேலும் தாமதங்களைத் தடுக்க முதுகலை […]