தருமபுரியில் ஜெய்கணபதி பைனான்ஸ் நிறுவனம் நிதி மோசடி செய்துள்ளதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோட்டில் உழவர்‌ சந்தை அருகில்‌, ஸ்ரீ ஸ்ரீ ஜெய்கணபதி பைனான்ஸ்‌ என்ற பெயரில்‌ நிதி நிறுவனம்‌ நடத்தி, அந்த நிதி நிறுவனத்தில்‌ வைப்பு தொகை பெற்றும்‌, மாதாந்திர எலச்‌ சீட்டு, மற்றும்‌ சிறு சேமிப்பு திட்டம்‌ ஆகியவைகளை நடத்தி பண மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின்‌ பேரில்‌ சேலம்‌ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் […]

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மிதமான மழைக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

பான் கார்டுடன் ஆதார் அட்டையை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த இரண்டு மாதங்களில் வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. முக்கியமான ஆவணங்களை இணைப்பதற்கான கடைசி தேதி இப்போது மார்ச் 31, 2023 ஆகும். மார்ச் 31, 2023க்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறினால், உங்கள் பான் எண் செயல்படாத ஆக மாறிவிடும் என வருமான வரித்துறை […]

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET 2023 பதிவுகள் மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் அறிவிக்கப்படும். இது குறித்து UGC இன் தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் கூறியதாவது; பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET (UG) 2023க்கான பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறை, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பங்கேற்கும் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார். முன்னதாக, […]

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]

துருக்கியின் தெற்கு மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 34 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் ஒரு பெரிய நகரம் மற்றும் மாகாண தலைநகரான காசியான்டெப்பில் இருந்து […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Data Engineer, Design Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று […]

கிராமப்புறங்களில் உணவுப்பதப்படுத்துதல் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. உணவுப்பதப்படுத்துதல் தொழில்களின் திறனை அதிகரிக்கவும் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை மேம்படுத்தவும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், பிரதமரின் குறு உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமரின் குறு உணவு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டங்களின் கீழ் உணவுப் பதப்படுத்துதல் […]

இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் நாம் ஒரு வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும்போது, ​​சமூகத்தின் மீது நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, எந்த வேலையும் எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது […]

கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 […]