திரிபுரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் உள்ளதைப் போல 2 லட்சம் புதிய வேலைகள், 4 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திரிணாமுல் […]
சீன இணைப்புகளுடன் கூடிய 138 ஆன்லைன் சூதாட்ட செயலி, 94 லோன் செயலியை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 138 பந்தய பயன்பாடுகள் மற்றும் 94 கடன் வழங்கும் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொருள்” இருப்பதால், இந்த செயலிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69 கீழ் நடவடிக்கை […]
அஸ்ஸாம் மாநில காவல்துறை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாநிலத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,278-ஐ கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக போடப்பட்ட 4,074 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. பிஸ்வநாத் மாவட்டத்தில் குறைந்தது 139 பேரும், பார்பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் […]
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது. தற்போது நடைபெற்று வரும் ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தவுள்ளது. ஆயுள் […]
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும்தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த […]
காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் செல்ல செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Part-Time Medical Consultant பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத […]
பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 271 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 271 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 60 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், […]
2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த […]