அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.மத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]
ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் M/s.சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (Kshema General Insurance Limited) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. […]
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட அரசு தடை விதித்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6(2)-இன் படி, தகவலுக்காக கோரிக்கை செய்கிற விண்ணப்பதாரர் ஒருவர், அந்தத் தகவலினைக் கோருவதற்கான காரணத்தையோ அல்லது அவரை தொடர்பு கொள்வதற்காகத் தேவை இல்லாத விவரங்களைத் தவிர, தனிப்பட்ட பிற விவரங்கள் எவற்றையும் அளிக்க கோரிக்கை வைக்க முடியாது. மத்திய அரசின் 08.01.2014 நாளிட்ட அலுவலகக் […]
நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க நவி மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவு. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 16-வேலண்ட் நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பிசிவி-16) உற்பத்தி செய்வதற்கான வணிக அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு, நவி மும்பையில் உள்ள டெக்இன்வென்சன் லைப்கேர் நிறுவனத்திற்கு நிதி உதவியை அனுமதித்துள்ளது. நிமோனியா, மூளைக்காய்ச்சல், காது தொற்று போன்றவற்றிலிருந்து தடுக்க […]
ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல […]
தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை நேற்று முதல் அமலுக்கு […]
திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் […]
மீனவ இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பதவிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் தேர்வர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள். இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் கடுமையான தேர்வாக இத்தேர்வு உள்ளது. […]
20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]
தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]

