காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார். மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் நடந்த கூட்டத்தில், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மழை பற்றாக் குறையால், கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் […]
முன்னாள் பிரபல இந்திய சர்வதேச கால்பந்து வீரர் பிரபாகர் மிஸ்ரா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. 1970 களில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மிஸ்ரா, 1976 இல் டாக்காவில் நடந்த ஆகா கான் தங்கக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடினார் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒரு கோல் அடித்த பெருமையைப் பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் காலமானதாக அவரது உறவினர்கள் […]
சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களால் பதிவுத்துறையில் முன்னோடித் திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்’ திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத் திகழ வைத்துள்ளது. பதிவுத்துறையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான “ஸ்டார் […]
பிரதம மந்திரியின் விவசாய ஊக்கத் தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ. 2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள் செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய ekyc, நில ஆவணங்கள் பதிவேற்றம் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் […]
சரியாக மதிப்பு நிர்ணயம் செய்யாததால் அரசுக்கு கிடைக்கப் பெறும் வருவாய் தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணத்தில் சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் மனைமதிப்பு இருக்கும் நிலையில் மாவட்டவருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80% கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்செய்யப்படும் […]
பஞ்சாப் & சிந்து வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் CHIEF FINANCIAL OFFICER பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் […]
இந்திய-சீனா எல்லையில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்புகளை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என்றும், இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. லே பகுதியிலிருந்து 211 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடாக்கின் கர்சோக் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – வரும் 20ம் தேதி முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவு. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். […]
ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் […]