கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே எனது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் ‌ இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்; நேற்று காலை கோவை நகரில்‌ உக்கடத்தில்‌ கார்‌ ஒன்றில்‌ சிலிண்டர்‌ வெடித்ததாக செய்தி அனைவரும்‌ கண்டிருப்பீர்கள்‌. இது தொடர்பாக தமிழககாவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுடன்‌ காவல்துறை உயர்‌ அதிகாரிகள்‌ கார்‌ சிலிண்டர்‌ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தங்களது முதல்‌ கட்ட விசாரணையை துவங்கினார்கள்‌. […]

கோயில் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் மத நிகழ்வின் போது மேடையில் விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மரணமடைந்த நபர், பேராசிரியர் ரணஞ்சய் சிங் என்பதை தெரிய வந்துள்ளது. மத விழா நடைபெற்ற மாருதி மானஸ் கோயிலின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார். நேற்று முன்தினம் […]

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்‌ 25.10.2022 அன்று விடுமுறை . இவ்வாண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடும்‌ பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள்‌ மட்டும்‌, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும்‌, அவ்விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 19.11.2022 அன்று பணி நாளாக […]

CSB வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Regional Sales Manager – Gold Loan பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 17 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. பணிகளில் குறைந்தது 5 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் […]

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளியை கேரள காங்கிரஸ் கமிட்டி மற்றும் டிசிசி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாதங்களுக்கு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட ‌‌அறிக்கையில் எம்எல்ஏ அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், அவரை காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாத காலத்திற்கு கட்சி இடைநீக்கம் செய்கிறது. “குற்றச்சாட்டுகள் குறித்து […]

தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பொய்யான செய்தியை உருவாக்கியதாக காசியாபாதை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் அன்று உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஐந்து ஆண்களால் தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக டெல்லி பெண்ணின் கூற்று “புனையப்பட்டது” என்று போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் பெண்ணின் கூட்டாளிகளான ஆசாத், அப்சல், கௌரவ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு […]

நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு-வடமேற்கு திசையில் 110 கிலோ […]

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்போது, அதனை முழு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். வருகிற 25-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் 8-ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி […]

படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400-ம்‌, பட்டதாரிகளுக்கு, ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி […]

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பாகராசியை சேர்ந்த மௌலவி அப்துல் […]