பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளியை கேரள காங்கிரஸ் கமிட்டி மற்றும் டிசிசி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாதங்களுக்கு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கேரள காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் எம்எல்ஏ அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், அவரை காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாத காலத்திற்கு கட்சி இடைநீக்கம் செய்கிறது. “குற்றச்சாட்டுகள் குறித்து அவர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவர் உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டார்” எம்எல்ஏ மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த குன்னப்பிள்ளி, விசாரணையின் ஒரு பகுதியாக குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேற்று ஆஜரானார். வரும் நாட்களில் அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.