வன்முறையில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறையில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசி அவர், இறந்தவர்கள் எந்தக் கட்சியின் அடிப்படையில் இருந்தாலும் அரசாங்கம் […]

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1 மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும்‌ அக்டோபர்‌ 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும்‌ நாட்களில்‌ இளைஞர்கள்‌ அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ புதுப்பிக்கப்படும்‌ மற்றும்‌ 18 வயதுநிறைவடைந்த ஆண்டின்‌ அடுத்த காலாண்டில்‌ தகுதியான இளைஞர்கள்‌தங்களைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்சேர்க்கைக்குப்‌ பிறகு, உரியவருக்கு வாக்காளர்‌ புகைப்பட அடையாள அட்டை […]

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கிராமம் தோரும்‌ தனியார்‌ ‘இ- சேவை மையம்‌ அமைத்திட புதிய உரிமம்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்துவிண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள்‌ https://tnesevai.tn.gov.inமற்றும்‌ https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில்‌ வருகின்ற 20.07.2023-க்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தை (தொலைபேசி எண்‌ : 044-29998040) அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம்‌ பொது தேர்வு நடைபெற்றது. இந்தத்‌ தேர்வு முடிவின்‌ மீது மறு கூற்றுவேண்டி விண்ணப்பித்த மாணவர்களின்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களின்‌ பதிவிற்கள்‌ பட்டியல்‌ இன்று மதியம்‌ அரசு தேர்வு துறையின்‌ www.dge.tn.gov.inஎன்ற இணையகளத்தில்‌ வெளியிடப்படும்‌. மறு கூட்டலில்‌ மதிப்பெண்‌ மாற்றங்கள்‌ குறித்து அதில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ மறுகூட்டல்‌ மதிப்பெண்‌ மாற்றுத்துடன்‌ தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை மதியம்‌ இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து […]

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Executive பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு […]

2025, ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் என்2 மற்றும் என்3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் கேபின்களில் குளிரூட்டல் அமைப்பைக் கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2023 ஜூலை 10 அன்று வெளியிட்டுள்ளது. குளிர்சாதன அமைப்புப் பொருத்தப்பட்ட கேபினின் செயல்திறன் சோதனை ஐஎஸ் 14618: 2022-ன் படியும், அவ்வப்போது திருத்தப்படும் நிலையின்படியும் இருக்க வேண்டும். அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பங்கேற்பாளர்களிடமிருந்து […]

ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், […]

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; சிமென்ட் வகை மற்றும் Fly Ash எனப்படும் எரி சாம்பல் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி […]

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் துறை மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இளநிலை பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு […]

மகளிர் உரிமைத் தொகை முகாம் பணி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை, மாநகராட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தன்னாா்வலா்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் […]