குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]
பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. […]
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் […]
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று வரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான இந்தத் திட்டத்தில், […]
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரியாக வரும் நீரை மட்டும் காவிரியில் திறந்துவிட்டு, தமிழகத்திற்கான பங்கீட்டை அளவுக்கு […]
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.15 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை பெறலாம். UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால […]
திருவாரூரில் ரூ.50 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு. முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி […]
விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]
தமிழகத்தில் 16ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 18-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், […]

