வரும் 6-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;;ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 6-ம் தேதி வரை தமிழ்நாடு, […]

பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணைத் தீர்மானத்தில், அதிகாரிகள் தங்களைச் சந்திக்க வரும் மக்களிடமும், ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் குடிமக்கள் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அல்லது மொபைல் போன் அழைப்புகளைப் பெறும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று […]

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 12-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 680 இடங்களில் சேர இதுவரை சுமார் 20,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் […]

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை […]

சிறந்த நடிகருக்கான விருது பெற்ற இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜ் 41 வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தர்மராஜ் சிட்னி சந்திரசேகராவின் ஏ-நைன் என்ற டெலிட்ராமா மூலம் தனது முதல் தொலைக்காட்சியில் தோன்றினார் மற்றும் 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் திரைப்படத்தில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு அவர் பல இலங்கை டெலிடாராமங்களிலும் திரைப்படங்களிலும் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,375 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Supervisor manager, Trainor Tellicoling counselor, Helper, security guard பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 140 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் […]

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சி வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வேண்டுமென்றால், அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாத்தல் மிக அவசியமாகும். ஏனென்றால், மக்களின் நலம் தான் ஒரு நாட்டின் உடைய எதிர்காலத்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டினுடைய எதிர்காலத்தை […]

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடந்த “இந்தோனேசியாவின் டாப் லீக் BRI லிகா கால்பந்து போட்டியில் கலவரம் வெடித்ததில் குறைந்தது 127 பேர் உயிரிழந்தனர். வன்முறை நெரிசலாக மாறியது, ஆயிரம் கணக்கான மக்கள் காயமடைந்தனர். இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகளும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. முதல் போட்டிக்குப் பிறகு […]

தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. […]