பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில் தொடங்க மானியம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். காதி மற்றும் கிராம தொழில் வாரியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்த நிதிஆண்டு முதல் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான […]
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார்நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் […]
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Manager, Team Lead, Chartered Accountant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 18 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல […]
விழுப்புரத்தில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த பாயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் […]
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவாக 503.92 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85% அதிகமாகும். முந்தைய ஆணடில் 352.75 லட்சம் பயணிகள் பயணித்தனர். மேலும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18% அளவிற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை […]
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும், 2023-ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ குமர குரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. வயர்மேன் பிரிவிற்கு 8-ம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் & AC டெக்னீசியன்,பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் […]
புதிய பாராளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு தெரிவிக்க சென்ற மல்யுத்த வீரர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ்பூஷன் சரண் சிங்கை நீக்கக்கோரியும், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் மல்யுத்தவீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் போகாத், சாக்சி மாலிக், […]
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 […]
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 31-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]
இணையதளம் மூலம் ஆதாரில் முகவரியை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் உள்ள ‘My Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, புதுப்பிப்பு ஆதார் பிரிவின் கீழ், Update Demographics Data Online’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.. அடுத்து ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்’ இணைப்பைக் கிளிக் செய்யவும். அந்த பக்கத்தில் தேவையான தகவலை உள்ளிடவும். அடுத்து உங்கள் […]