மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவம்.. மத்திய உள்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் 25 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் […]

திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும்‌ ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌. அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ செய்தால்‌ அவை பசுமரத்தாணிபோல்‌ பதிந்து, நெஞ்சில்‌ நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்‌. தாம்‌ பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம்‌ மிக்கவர்களாக மாணவர்கள்‌ உருவாக வழிவகுக்கும்‌. எனவே, 1330 திருக்குறட்பாக்களையும்‌ […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Deputy General Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 முதல் 12 வருடம் வரை அனுபவம் உள்ளவராக […]

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை” முன்னிட்டு “மகளிர் மதிப்புத் திட்டம்” 2023-ஐ மத்திய அரசின் நிதி அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் இந்தத் திட்டம் துவங்குவதற்கான சிறப்பு முகாம் 29.05.2023 முதல் 31.05.2023 வரை நடைபெறுகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும் மற்றும் பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலராக இந்த கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.5% என்ற அதிக […]

இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; செயல்முறைகள்‌ மூலம்‌ 2022- 2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக திருத்திய கால அட்டவணைகள்‌ வெளியிடப்பட்டது. தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பாக கீழ்க்காணும்‌ திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசின்‌ சட்டம்‌ மற்றும்‌ நீதி அமைச்சகம்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாயத்தை தமிழ்நாட்டில்‌ 37-ஆவது இனமாக பழங்குடியினர்‌ பட்டியலில்‌ இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதனைத்‌ தொடர்ந்து, அந்த சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களைப்‌ பெற தகுதியடைய ஏதுவாக தமிழக அரசால்‌ ஆணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர்‌ மக்களுக்கு சாதிச்‌ சான்றிதழ்‌ வழங்க […]

இந்திய வானிலை மையம் தனது செய்தி குறிப்பில், இன்று ஹரியானா, வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்யக்கூடும். கேரளா மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகாவிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக் கூடும். அதே போல ஹரியானா, வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்திற்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை […]

பீகார்‌ மாநிலம்‌ அராரியாவில்‌ உள்ள அரசுப்‌ பள்ளியில்‌ வழங்கப்பட்ட மதிய உணவில்‌ இறந்த நிலையில்‌ இருந்த பாம்பு. உணவை சாப்பிட 150க்கும்‌ மேற்பட்ட குழந்தைகள்‌ மருத்துவமனையில்‌ அனுமதி. பீகாரில் சனிக்கிழமையன்று அராரியாவில்‌ உள்ள அரசுப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு காணப்பட்டதால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உணவை சாப்பிட்ட […]

உங்கள் EPFO இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் மொபைல் எண் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் பெறலாம். அதேபோல, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், தங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் […]

ஆதீனங்கள் முன்னிலையில்‌ புனித செங்கோலை மதுரையின்‌ 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள்‌ பிரதமர்‌ நரேந்திர மோடியிடம்‌ வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின்‌ புதிய கட்டிடம்‌ இன்று பிரதமர்‌ நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்‌. இந்நிலையில்‌, டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள்‌ அமைச்சர்கள்‌ மற்றும்‌ மற்ற ஆதீனங்கள் முன்னிலையில்‌ புனித செங்கோலை மதுரையின்‌ 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள்‌ பிரதமர்‌நரேந்திர மோடியிடம்‌ நேற்று வழங்கினார்‌. நாடாளுமன்றத்தின்‌ புதிய கட்டடம்‌ இன்று […]