தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய […]
பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான தெரிவை மத்திய குடிமைப் பணி விதிகள், 2025 வழங்குகின்றன என மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டப் பயன்களை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவது தொடர்பாக பணி வரைமுறை செய்வதற்கான மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அமலாக்கம்) விதிகள் […]
மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]
தருமபுரி மாவட்டத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் […]
பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய அம்சங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து […]
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில […]
பனை மரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: சட்டப்பேரவையில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தாக்கல் செய்யும்போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தும் செயலைத் தடுக்கவும் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்படும்” என அறிவித்தார். […]
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த நிலையில் அண்மையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும், ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்தும். மேலும் திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும், நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட […]
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. (2901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது). கடந்த 2024-25-ம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு […]

