பி.எம் கிசான் 14வது தவணை இம்மாத இறுதியில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பிரதமர் கிசான் யோஜனாவின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதத்தில் விடுவித்தார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தலா ரூ 2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2 ஹெக்டேர் குறைவான […]
சென்னையில் உள்ள ஸ்ஊபீ எனும் பொம்மைக் கடையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பிஐஎஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 187 பொம்மைகள் (161 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 26 எலக்ட்ரிக் பொம்மைகள்) பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, சென்னை திருவொற்றியூரில் உள்ள M/s ஸ்ஊபீ […]
இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவையை வழங்குகிறது, இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விளம்பர பொறிமுறையாகும். மீடியா போஸ்ட் மூலம் அஞ்சல் எழுதுபொருட்கள், தபால் அலுவலக பாஸ்புக்குகள், தபால் வளாகங்கள், தபால் நிலையங்களில் நிறுவப்பட்ட டிவிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பலவித சேவைகளில் விளம்பரம் செய்ய முடியும். இந்தியா போஸ்ட்டின் விரிவான நெட்வொர்க் […]
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர், நுழைவு தேர்வு ஏதும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல அறிவியல் […]
கேரள மாநில தோட்டக்கார பகுதியைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் லால் ஜோஸின் தாயார் லில்லி ஜோஸ் தனது 83வது வயதில் காலமானார். இவர் எல்எஸ்என் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர். 1980 களின் பிற்பகுதியில் பொழுதுபோக்கு துறையில் அடியெடுத்து வைத்த லால் ஜோஸ், […]
தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவருடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. மாவட்ட அரசுப் பணியிடங்களில் காலியிடம் ஏற்படும் போது அந்தப்பணியிடத்திற்கு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 90 நகராட்சித் தலைவர் பதவிகள் மற்றும் 623 வார்டுகளைத் தவிர 17 மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கைப்பற்றியது. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களின் போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிடம் பாஜக தோல்வியடைந்த மீரட் மற்றும் அலிகார் ஆகிய இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது தவிர, முனிசிபல் கார்ப்பரேஷன் ஆன பிறகு இந்த ஆண்டு […]
விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு இருந்த வீரப்பன் என்பவர் உள்ளிட்ட10 பேர் தன்னை தாக்கியதாகவும், 2 லட்சம் […]
உரம் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து அரசுக்கு புகார் அளிக்கலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முன் எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் முதல் செப்டம்பரில் முடிய உள்ள கோடையில் குறுவை, முன்சம்பாப் பருவத்திற்குத் தேவையான மொத்த உரத்தேவையில் 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில் 39சதவீதமும், டிஏபி தேவையில் 50 சதவீதமும், காம்ப்ளக்ஸ் […]
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று முதல் 17-ம் தேதி வரை 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஜி-20 உறுப்பினர்கள், நட்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கலாச்சாரத் துறை எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனைகளைப் பற்றி இக்கூட்டம் விவாதிக்க உள்ளது. இந்தியாவின் ஜி-20 தலைமையில் கலாச்சார பணிக்குழு கூட்டங்கள் 4 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. அவை, கலாச்சாரச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, […]