பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager / Senior. Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 8 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு […]
நடப்பாண்டு அன்டாலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதை அடுத்து ஒலிம்பிக் வில்வித்தை வீரரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான அட்டானு தாஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆடவர் ரிகர்வ் தனிநபர் தரவரிசை பிரிவில் 673 புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பெற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச […]
இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் […]
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1 கமாண்டோ போலீசார் உயிரிழந்தார், 5 பேர் காயமடைந்தனர். மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள தேரா கோங்ஃபாங்பி அருகே நேற்று போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார் மற்றும் 5 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. காயமடைந்த போலீஸ்காரர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அறிக்கையின்படி, மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை முதலில் வெடித்த டோர்பங்கிலிருந்து சில […]
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து […]
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் வரும் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் LKG வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கைக்கு 18-ம் தேதி […]
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தொடங்கி வைத்து, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார். […]
இந்திய வானிலை ஆய்வு மையம், வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13.05.2023 அன்று சற்று வலுவிழந்து 14.05.2023 அன்று 120 – 145 கி.மீ. / மணி […]
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குூறைதீர்ப்பாளர் பணி என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்குவழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் […]
இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தின் தொடர்ச்சியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஐட்ரோன் முன்னெடுப்பின் கீழ் ட்ரோன்கள் மூலம் ரத்தம் விநியோகம் செய்வதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடக்க சோதனையின்போது, ஜிஐஎம்எஸ் மற்றும் எல்ஹெச்எம்சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையானது விவசாயம், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் சுகாதாரப் […]