புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நேற்று (3-5-2023) நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த திருமயம் தாலுகா, கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரை எதிர்பாராத விதமாக மாடுமுட்டியதில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்து குறிப்பில்; புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் மஞ்சு விரட்டின் போது சுப்ரமணியம் என்பவர் மாடுமுட்டி உயிரிழந்த செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். […]
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முககர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார்கள். […]
வரும் 8-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பொது தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வரும் 8ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும். மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்க வேண்டும். நான் முதல்வன்’ என்ற […]
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை பஜ்ரங் தள் அமைப்பு எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வதாக உறுதியளித்த காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் தொண்டர்கள், அக்கட்சி […]
இந்தியாவில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிப்பதற்கான பாஸ்டாக் முறையை செயல்படுத்துவது அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் 29 அன்று, இதன் மூலம் தினசரி சுங்க வசூல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 193.15 கோடியை, ஒரே நாளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் வசூல் செய்துள்ளது. 2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து பாஸ்டாக் கட்டாயம் என கொண்டுவரப்பட்டதிலிருந்து, 339 மாநில சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்டாக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 770 லிருந்து […]
திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர்,பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், […]
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இவர் மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி- சுசீலா தம்பதிக்கு 2-வது மகனாக தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 2016-ம் ஆண்டு வரை நியூயார்க்கில் வசித்து வந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு திரும்பினார். கோலாப்பூரில் வசித்து […]
பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் […]
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்ராய் வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி “தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது என்ற தலைப்பிலான ஆலோசனைகளை வெளியிட்டது. இந்த ஆலோசனைகள் மீதான கருத்துகளைத் தெரிவிக்க 2022-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை […]
பஞ்சாப் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் விளைவிக்கும் என்று முதல்வர் பகவந்த் மான் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்; மாநில அரசு துறைகளின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்தது. இனி காலை 7.30 முதல் […]